Sunday, 12th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
நாமக்கல்: நாமக்கல் கீரம்பூரில் உள்ள நவோதயா அகாடமி சீனியர் செகண்டரி பள்ளி மாணவர்கள் கடந்த நவம்பர் மாதம் 5 ஆம் தேதி நாமக்கல் கவிஞர் சிந்தனைப் பேரவை சார்பாக பள்ளி மாணவர்களுக்கு நடைபெற்ற ஓவியப்போட்டி மற்றும் கையெழுத்துப் போட்டியில் நமது பள்ளி ஆறாம் வகுப்பு மாணவி ஜி.எம். சம்பிரித்தா பதக்கம் மற்றும் சான்றிதழ் பெற்றுள்ளார்.
ஓவியப் போட்டியில் 5 ஆம் வகுப்பு மாணவி ஸ்மித்ரா முதல் இடத்தையும் 4 ஆம் வகுப்பு மாணவர் சங்கமித்ரன் ஓவியப் போட்டியில் இரண்டாம் இடத்தையும் பெற்று பதக்கம் மற்றும் சான்றிதழை பெற்றுள்ளனர்.
மாவட்ட அளவில் சிப்அகாடமியால் (SIPP) நடத்தப்பட்ட அபாக்கஸ் போட்டியில் தி நவோதயா அகாடமி பள்ளி மாணவர் வி.சங்கமித்ரன் கோப்பையை வென்றுள்ளார்.
மாநிலஅளவில் நடைபெற்ற சிலம்பம் போட்டியில் எமது பள்ளி மாணவி டி.வேதவள்ளி மற்றும் வேதவியாஷினி கலந்து கொண்டு தொடர்ந்து 2 மணி 30 நிமிடம் சிலம்பம் சுழற்றியதற்கான முதல் பரிசையும் சாதனை சான்றிதழையும் பெற்றுள்ளார்.
தமிழ்நாடு அஞ்சல்;துறை சார்பாக நடைபெற்ற நடனப் போட்டியில் எமது பள்ளி மாணவி வேதவள்ளி முதல் பரிசையும், வேதவர்ஷினி இரண்டாம் பரிசையும் பெற்றுள்ளார்.
பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களை வழிபாடு கூட்டத்தில் பள்ளி நிர்வாகத்தினர், முதல்வர், ஆசிரியர்கள் மற்றும் சக மாணவர்கள் வாழ்த்துக் கூறி பாராட்டினர்.